ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
விதி இருந்தால் மட்டும் காண முடியும் சிவன் ஆலயம்
ஓம் அகத்தீசாய நமஹ!
மூலக் கனலே சரணம் சரணம்!
முடியா முதலே சரணம் சரணம்!
கோலக் கிளியே சரணம் சரணம் !
குன்றாத ஒளி குவியே சரணம் சரணம்!
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன்!
அருள்வாய் வாழைகுமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே வருவாய்!
என்று அம்பாளை பாடிய அகத்திய மாமுனிகள் வழிபட்ட ஒரு அழகிய திருத்தலத்திற்கு செல்வோம்.
பட்டும் கோட்டையும் சேர்ந்து சுக்கிரனும் செவ்வாயும் ஆதிக்கம் செலுத்தும் நன்னிலத்தில் அருகில், புண்ணிய பூமியாம் பொன்னவராயன் கோட்டையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் .
இந்த அகிலாண்டேஸ்வரி அகிலத்தைக் காப்பவள். அகிலத்தைக் காத்து வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த அற்புதத் திருத்தலம் அப்படிங்கறது அனைத்து சர்வ தோஷ பரிகார ஸ்தலம்.
இந்த சர்வ தோஷ பரிகார ஸ்தலம், நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் - நாம போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் - இதற்கு எங்கே தீர்வு என நாம் தேடுகையில் கிடைக்கும் இந்த அழகிய திருத்தலம், உங்களுக்கு தீர்வு தரும்.
தோஷநிவர்த்திக்கு இந்த ஆலயத்தில் நிறைய சிறப்புகள் இருக்கு. முன்னோர்களால் ஏற்படக் கூடிய பித்ரு சாபத்தை நீக்கக்கூடியஇடம் என்று சொல்லலாம்.
இந்த சிவன் அகிலாண்டேஸ்வரி, அகத்திய மாமுனிவருக்கு காட்சி கொடுத்து - அவருடைய புகழ் பெற்ற ஒரு ஸ்தலமாக அகத்தியர் வந்து பூஜித்த ஸ்தலமாக போற்றக் கூடிய இந்த ஸ்தலத்தை ஜோதிடராகிய ஒவ்வொருவரும் வந்து தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு.
விதி இருப்பின் கூட்டி அருள்க, என்ற பழமொழி உள்ளது.
விதி இருந்தா மட்டும் தான் இந்த ஆலயத்தை பத்தி தெரிஞ்சுக்க முடியும். இந்த ஆலயம் பத்தி நம்மளால கேள்விப்படவும் முடியும். அப்படி ஒரு அற்புதமான ஒரு ஆலயம். பூசம் நட்சத்திரத்தின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
அரச மரத்தின் அடியே கூரையாக - இந்த ஆலயத்துக்கு நிறைய பேர் கோயில் கட்டுவதற்காக முயற்சி பண்ணியும், அவங்களால கோயில் எழுப்ப முடியல .
இறைவன் வந்து அரச மரத்தடியை கூரையாக இருந்து அருள் பாலிக்கும் முடிவெடுத்துட்டதனால, இதுல இருந்து அவங்கள மாற்ற முடியல.
ஆவுடை எந்த அளவிற்கு போகின்றது என்று பார்த்து பாலாலயம் பண்ணி திருப்பணி மேற்கொள்ளலாம் என்று பல தடவை முயற்சி செய்தும் அந்த ஆவுடையின் ஆழத்தை அவங்களால தெரிஞ்சுக்க முடியல. அதனாலயே இந்த ஆலயம் கட்டும் பணியை தள்ளி வைத்துவிட்டார்.கூடுதல் சிறப்பு என்னவெனில் பட்டுக்கோட்டை பக்கத்திலேயே பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுவுடையார் கோவில். ஆலமரமே கூரையாக அமர்ந்து அருள் பாலித்து வரக் கூடிய சிவ ஆலயம்.
இங்கு அரசமரம் என்றால் அங்கு ஆலமரம். அரச மரமே கூரையாகவும், ஆலமரமே கூரையாகவும், அருள் பாலிக்கும் இந்த இரு சிவ ஆலயங்களும் பட்டுக்கோட்டையிலே உள்ளது கூடுதல் சிறப்பு.
சிறப்பு வாய்ந்த இந்த ஆலயங்களை தரிசனம் செய்து உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற, இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
இந்த ஸ்தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில். இந்த திருக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் தோன்றியது.இத்திருக்கோயிலின் சிறப்பு அகத்தீஸ்வரருக்கு சிவன் காட்சி கொடுத்த தலம். இத் தலத்தில் உள்ள விநாயகர் பெயர் வரம் தரும் விநாயகர். முருகர் சுப்பிரமணியனாகவும் -
ராகு கேது பரிகார தலமாகவும் –
தாராதேவி சமேத குரு பகவானும் -
மந்தாதேவி சேஷா தேவி சமேத சனீஸ்வர பகவானும் அருள் புரிகின்றனர்.
நோய்களுக்கு தீர்வும் - ஏவல் பில்லி சூனியம் பிரச்சனைகளுக்கு தீர்வும் - குழந்தை வேண்டி வருபவருக்கு குழந்தை பாக்கியமும் கிட்ட, மூலிகை மருந்துகள் தரப்படுகிறது.இந்த கோயிலின் சிறப்பு, வருடம் முழுவதும் நடை சாற்றாமல் அருள் பாலிக்கிறார் ஆதிக்கடவுள் அகிலாண்டேஸ்வரி அம்மன்.
எப்பொழுது வேண்டுமானாலும் இறை தரிசனம் செய்யலாம். எந்த ஒரு தடையும் இல்லாமல் !!!அகிலாண்டேஸ்வரி அருள் பெறுவோம்.
ALP ASTROLOGY VIDEOS👉https://youtu.be/S7oGKaMDq0c?si=ZBBuk1F_-dA-LYgL
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology