ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/XX68u_xSbi0?si=gwAYB6jUAtrQK2d5
அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும், எல்லா வளமும் பெற வேண்டும்.
எல்லாருடைய கேள்வி என்ன அப்படின்னா, இந்த ஜோதிடம் என்பதும், ஆன்மீகம் என்பதும் ஒன்றா, இல்ல வெவ்வேறா?
இதில் ஒரு பெரிய போராட்டமே இருக்கு. என்ன அப்படின்னா, எல்லோரும் என்ன சொல்றாங்கன்னா, ஆன்மீகமும், ஜோதிடமும் ஒன்றோட ஒன்று, அப்படின்னு சொல்றாங்க. இல்ல, ஆன்மீகம் என்பது வேறு, ஜோதிடம் என்பது வேறு, அப்படின்னு சொல்றாங்க. இதுல வந்து, வலது கண் முக்கியமா, இடது கண் முக்கியமான்னா, இது எப்படி இருக்கும்? அப்படித்தான். இந்த இரண்டு கண்கள் மாதிரி தான், இரண்டு நிலைகளும்.
எப்படி வந்து, உலகம் தோன்றியதில் இருந்து, எல்லோரும் ஒரு கேள்வி கேட்பாங்கல்ல. முட்டையிலிருந்து கோழி வந்ததா, இல்ல கோழியிலிருந்து முட்டை வந்துச்சா, அப்படிங்கற ஒரு நிகழ்வு. ஆனா, இப்போ அதற்கும் பதில் வந்து விட்டது. www.alpastrology.com
இந்த ஆன்மீகமும், இந்த ஜோதிடமும், இரண்டும் ஒன்றோடு ஒன்று, இணைந்து, தனித் தனியாக செயல்படக் கூடிய ஒரு நிகழ்வு.
உதாரணத்திற்கு நம்ம எப்படி சொல்லுவோம் அப்படின்னா, ரயில் தண்டவாளங்கள் பார்த்திருப்பீங்க. இரண்டு கம்பிகள் இருக்கும். இந்த ரெண்டு கம்பிகள் பார்த்தீங்க அப்படின்னா, ரெண்டு தண்டவாளத்தில் அந்த ட்ரெயின் பயணிக்கும். அதுல பாத்தீங்கன்னா, அவ்வளவு அழகா பயணிக்கும். அப்படின்னா ஒரு தண்டவாளம்ங்கிறது ஆன்மீகம், ஒரு தண்டவாளம்ங்கிறது ஜோதிடம். ஒன்றை ஒன்று சேர்ந்தும் இயங்காது, ஒன்றை ஒன்று விலகியும் இயங்காது. விலகி இயங்கினாலும், இந்த மனிதன் என்கிற வாழ்க்கை இருக்குல்ல, மேலே போகக் கூடிய ட்ரெயின் இருக்கு பாருங்க, அந்த ட்ரெயின்ல இருக்கக் கூடிய சந்தோஷமும், பயணிக்கக் கூடிய சந்தோஷங்கள் எனும் ஒரு பயணம் இருக்கு பாருங்க, அது மொத்தமும் கொலாப்ஸ் ஆகி விடும்.
இல்ல, இல்ல, ஆன்மீகம் மட்டுமே அப்படிங்கறது, ஒரு தண்டவாளம்ங்கிறது நல்லா இருக்காது. இல்ல, ஜோதிடம் மட்டுமே அப்படிங்கிறது, ஒரு தண்டவாளம்ங்கிறது நல்லா இருக்காது. இந்த இரண்டு தண்டவாளங்களும், இந்த இரண்டு கம்பிகள் இருக்குல்ல, இந்த இரண்டு கம்பிகளும் சேர்ந்து, இந்த ரயில் பயணம் அப்படி இருக்கும் பாருங்க. அவ்வளவு அழகா வாழ்க்கையில, ஏன்னா, எல்லோருமே ஒரு மனிதன் எப்படி சந்தோஷமா வாழணும், அவ்வளவுதான். நீங்கள் ஆன்மீகத்தில சொன்னாலும், அது தான். ஜோதிடத்தில் சொன்னாலும் அது தான்.
உதாரணமாக, ஆன்மீகம் என்பது பயபக்தி என சொல்லலாம், பக்தி என சொல்லலாம், ஆன்மீகம்னு சொல்லலாம், கடவுள்னு சொல்லலாம், தெய்வங்கள்னு சொல்லலாம். இது ஒவ்வொண்ணுக்கும், ஒரு வரைமுறை இருக்கு.
ஆனால், இந்த ஜோதிடம் எப்படின்னா, இந்த இந்த நிகழ்வுகள், இந்தந்த காலகட்டத்தில், இவர் இதை அனுபவிச்சு தான் ஆகணும்ங்கிறது, ஒரு கட்டாயத்தின் பெயரில், இதுதான் அனுபவிக்கணும்னு ஒரு சட்ட திட்டங்கள் இருக்கு பாருங்க, அது தான் இந்த ஜோதிடம்.
இந்த சட்ட திட்டங்களை உருவாக்கினது யார் அப்படின்னா, இந்த கடவுள். ஆனால் இந்த கடவுள், எப்போதும், நான் வந்து சட்ட திட்டங்களை போட்டுட்டேன். நான் அதை மாத்துவேனா, அப்படின்னா, மாற்றாது. நான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்றேன், ஒரு வாய்ப்பு கொடுக்கின்றேன். நீ ஒரு கெட்டதை செஞ்சிருந்தாலும், என்றைக்காவது ஒரு நல்லது செஞ்சன்னா, இந்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப, நான் உனக்கு வழி தரேன். நீ மறுபடியும் தவறு செய்யாமல் இருந்தால், மறுபடியும் ஒரு நல்ல பாதை ஏற்படுத்திக்கிட்டன்னா, மறுபடியும் உன்னுடைய புரிதல் இருந்துச்சுன்னா, உனக்கு கண்டிப்பாக இந்த ஆன்மீகத்தில் இருக்கக் கூடிய இந்த கடவுளும், இந்த கிரகமும், சேர்ந்து, உங்களுக்கு நல்லதொரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும். அப்படி இல்லன்னா, நான் ஒரு சட்ட திட்டம் போட்டுட்டேன். நீ என்ன அனுபவிக்கணுமோ, அனுபவிச்சுடு. நீ என்ன பண்ணு, நீ அனுபவிச்சுதான் ஆக வேண்டும். இதை நீங்கள் வேண்டுமென்றாலும், வேண்டாமென்றாலும், இந்த கிரகங்கள் ஒருபோதும் தன்னிலை மாறாது. www.alpastrology.org
ஆனா அப்படி கிடையாது. இந்த ஆன்மீகம் இருக்கு பாருங்க, இந்த தெய்வம் இருக்குது பாருங்க. இது வந்து அம்மா, அப்பா மாதிரி. என்ன பண்ணும்? எப்படியாவது காப்பாத்தணும் இந்த பிள்ளையை.
ஆனா, இந்த கிரகங்கள் இருக்கு பாருங்க. நீ பிறந்துட்டயா. நீ இன்னாருக்கு பிறந்தியா, நீ அனுபவிச்சுதான் ஆகணும். நீ, இப்படித் தான் கஷ்டப்பட்டு ஆகணும். உனக்கு நல்ல நேரம் வரும்போது, உனக்கு நல்வாழ்க்கை தர்றேன். கெட்ட நேரம் வரும்போது, தீய பலன்கள் தர்றேன். ஒரு புரிதலை ஏற்படுத்தும்.
இந்த ஜோதிடம் என்பதும், தெய்வங்கள் என்பதும், இரண்டு கண்கள் மாதிரி. இது, ஒன்றை ஒன்று சார்ந்து, சேர்ந்து இயங்கும். வாழ்க்கைங்கிற சந்தோஷப் பயணத்தில, இந்த ஜோதிடம் தான் முதல் படி.
இந்த ஜோதிடம் படிச்சுட்டா தான், இந்த ஆன்மீகம்னா என்ன, பயபக்தினா என்ன, கடவுள்னா என்ன, தெய்வம்னா என்ன, எனும் ஒரு புரிதலோட முதல் படியே புரியும்.
நான் ஏன் இங்க வந்து நிக்கிறேன், அப்படின்னா, இந்த முதல் படி ஏறினா தான், கடவுள் எதெல்லாம் நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு, தெய்வங்கள் எதெல்லாம் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கு, கிரகங்கள் எதுல வாய்ப்பு பயன்படுத்துது, நட்சத்திரங்கள் எவ்வாறெல்லாம், நமக்கு வழி கொடுக்குது, இந்த நட்சத்திரங்கள் வழியே கிரகங்கள் செஞ்சு, இந்த பாவங்களை சந்தோஷமா அனுபவிக்கறதற்கு, எவ்வளவு அழகான பாதை படைத்து, படைச்சவனே நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காருல்ல. அதான் ஜோதிடத்தை என்ன பண்ணுவேன், ஜோதிடத்தை கடவுளின் மொழின்னு, நான் சொல்றேன்.
இவங்க எல்லோரும் என்ன நினைக்கிறாங்கன்னா, ஜோதிடம் என்பது நாமே ஏற்படுத்தினதுன்னு. நாமே, இதை ஏற்படுத்த முடியாது. இது அந்த கிரகங்கள் அனுமதியுடன், இந்த தெய்வங்கள் உருவாக்கின ஒரு விஷயம் தான், இந்த ஜோதிடம். இந்த ஜோதிடத்தை பிடிச்சாதான், இந்த தெய்வத்தையும், இந்த கடவுளையும் பற்றற்று பற்றோடு பிடிக்க முடியும்.
தயவு செய்து, எல்லாவற்றிற்கும் முதல் படி, இந்த ஜோதிடம் தான். சந்தோஷமா வாழணுமா, இந்த ஜோதிடம் தான். நிம்மதியா வாழணுமா, ஜோதிடம் தான். உங்க வாழ்க்கையில் அவ்வளவு அழகா ஒரு புரிதலையும், ஒரு உணர்தலையும் கொடுப்பதற்கான முதல் படி அப்படிங்கிறது, இந்த ஜோதிடம்.
இந்த ஜோதிடத்தில் வழியே, இந்த கடவுளையும், இந்த தெய்வங்களையும் அழகாக பிடிச்சு, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து, ஒவ்வொரு இடத்திலும் உணர்ந்து, சந்தோஷமா வாழணும் அப்படிங்குறது தான்,
என்னுடைய அனுபவத்தில், நான் சொல்ல வேண்டிய விஷயம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். என்னுடைய இயல்பு வாழ்க்கையில எனக்கு, இதெல்லாம் நான் கேட்ட கேள்வி. நான் ஆன்மீகம், பக்தி, கடவுள், தெய்வம் என்று போனப்போ, எங்கே, எங்கேன்னு சுற்றி சுற்றி வரும்போது, கடைசியா ஜோதிடம் தான் எனக்கு ஒரு வழி காட்டியது. நீ இந்த பாதையில் செல்ல வேண்டும் என்று வழி கிடைத்தது.
நாம் சொல்லுவோம்ல, Google Map என்ன பண்ணும், அப்படின்னா, ஒரு பாதையில் போயிட்டு இருப்போம், ரைட் சைடுல ஒரு பாதையை விட்டுட்டு போனோம்னா, U TURN அடிச்சுவா, அப்படிங்கும். ஆனால் வாழ்க்கையில் போனால் U TURN-லாம் அடிக்க முடியாது. அடுத்த பாதை, அந்த பாதையை தான் தேர்ந்தெடுக்க முடியும். கடவுள் வந்து முன்னாடியே எச்சரிக்கும்.
ஏ, போகாதப்பா. ஒரு பத்து லட்சம் ரூபாய் இன்வெஸ்ட் பண்ணப் போற, போடாத அப்படின்னு, யாராச்சும் ரூபத்தில வந்து சொல்லும். போகச் சொல்லும். உங்க கையில் இருக்கும் பணம் போகணும்னா போக சொல்லும். உங்க கையில் இருக்கக்கூடிய பணம் போகக் கூடாதுன்னா, எச்சரிக்கும்.
அதனால் இந்த கடவுளும், இந்த நவகிரகங்களும், ஒருவருக்கொருவர் சார்ந்து, ஒரு தனிப்பட்ட மனிதன் வாழ்க்கையில், என்னென்ன நிகழ்வுகள் நடத்துவாரு, சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு, சட்ட திட்டங்களை எவ்வாறு அழகாக பயன்படுத்த வைப்பாரு. கடவுள் என்ன பண்ணுவாரு. பேசாம அமைதியா இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்.
படைத்தவன் பார்த்துக் கொள்வான், இந்த நவகிரகங்கள் நம்மை பார்த்துக் கொள்ளும். இது எட்டி நின்று பார்க்கும் போது, எனக்கு புரியவில்லை. ஆனால் இந்த கிரகங்களை அவ்வளவு அழகாக புரிந்து கொண்ட போது, அந்த தெய்வங்களை, அழகாக நான் உணர்ந்த போது, என் வாழ்க்கையில் அவ்வளவு ஒரு மாற்றம் வந்துச்சு.
அதுக்காகத் தான், இந்த ஆன்மீகமும், ஜோதிடமும், ஒன்றை ஒன்று சார்ந்தும், சேர்ந்தும் தான், செயல்படுது. இதை அவரவர் பார்வைக்கு நான் விட்டு விடுகிறேன். ஆன்மீகம் வேறு, ஜோதிடம் வேறு என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
ஆனால் என்னுடைய பார்வைக்கு, ஆன்மீகமும், ஜோதிடமும் இரண்டு கண்கள் மாதிரிதான். வலது கண் முக்கியமா, இடது கண் முக்கியமா, எது முக்கியெமன்று கூற முடியும்? இரண்டு கண்களும் தான் முக்கியம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடம், கடவுளுடைய அனுமதியோடு வந்துச்சு.
இன்றைக்கு வளரக் கூடியவர்களுக்கு, ஒரு வாழ்க்கையை புரிய வைப்பதற்கு, இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் பயன்படுகிறது, எல்லோருக்கும். நல்லா வாழணும். ரொம்ப சந்தோஷம்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology