ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/89_Qac21Qd0?si=DCZErgHBWxnVnn1J
கிரக ஆதிபத்யமும், அட்சய லக்ன பத்ததி ஜோதிடமும். - ALP ஜோதிட ஆய்வு.
~ ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி.
குருஜி ஆன்மீக அறக்கட்டளை, திரு அண்ணாமலையார் ஜோதிடர் ஆலயம் வழங்கும், இந்த ஜோதிட மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும், என்னுடைய ஜோதிட உறவுகளுக்கும், குடும்பத்திற்கும், முதற்கண் வணக்கம்.
ஒரு நிகழ்வு என்பது சாதாரணமாக எளிமையாக அமையாது. இவ்வளோ பேரோட ஒத்துழைப்போடு இந்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிற யுவராஜ் அவர்களுக்கு முதல்ல நன்றி சொல்லணும். ஏனென்றால், என்னுடைய சந்திப்பும் யுவராஜ் அவர்களுடைய சந்திப்பும் ஒரு நாலு ஐந்து வருடம் இருக்கும். ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டு இருந்தேன். உண்மையிலே நான் வெளி நிகழ்வுகளுக்கு கலந்து கொள்வதில்லை.
ஆனால், யுவராஜ் என்னுடைய நிகழ்வுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தப்போ, உடனே அந்த நிகழ்வுக்கு வந்து ஓம் செல்வராஜ் மற்றும் யுவராஜ் வந்து சிறப்பாக நின்று செய்து கொடுத்தார்கள். இங்கு இந்த நிகழ்வு எப்படி என்றால், இவ்வளவு அமைதியா இவ்வளவு ஒரு சந்தோஷமா, இப்படி ஒரு நிகழ்வை ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறது, சந்தோஷமாக, ஒரு ஆனந்தமாய் இருக்கிறது.
ஏன்னா, இரண்டு பேர் என்னமோ பிசியா அங்குட்டு பேசிட்டு இருப்பாங்க. இரண்டு பேர் அங்குட்டு போய்கிட்டு இருப்பாங்க. இங்க அப்படி கிடையாது ஒரு ஜோதிடருக்கு என்ன வேண்டும் அப்படிங்கிற நிகழ்வை, இங்கே தான் பார்க்கிறேன். www.alpastrology.org
உண்மையிலே யுவராஜ் கற்றுக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏன்னா இது சொல்லிக் கொடுத்து வர்ற பழக்கமல்ல, இந்த ஜோதிடம். கள்ளக்குறிச்சியில் முன்னாடி ஒரு ஹோமம் பண்ணி இருந்தோம். 42 ஜோதிடர்கள் வந்திருந்தார்கள். அன்னைக்கு பார்த்தால் 630 பேர் சுயம்வர பார்வதி கலா ஹோமம் பண்ணி இருந்தோம். அந்த நிகழ்வு வந்து காலைல நாலு மணிக்கு ஆரம்பித்து, அன்னைக்கு ஈவினிங் ஆறு மணி வரைக்கும் நடந்த நிகழ்வு. இவங்க இவங்க இந்த வேலை தான் செய்யணும் அப்படின்னு கிடையாது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வேலையை செய்து அந்த நிகழ்வு நடத்துனாங்க. அதே மாதிரி இங்க வந்து நான் அத்தனை பேருடைய பங்களிப்பும் பார்க்கிறேன். நான் வந்ததுல இருந்து பார்க்கிறேன். ஒவ்வொருத்தரும் இத சொல்லுங்க இத செய்யுங்க அப்படின்னு கிடையாது. அவங்கவங்க அவர்களுடைய வேலையை செய்றாங்க. முதல்ல யுவராஜுக்கு வந்து நன்றி சொல்லணும், இந்த நிகழ்விற்கு. ரொம்ப, சந்தோஷம்.
அட்சய லக்ன பத்ததி அப்படிங்குற ஜோதிட முறை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அத பத்தி இரண்டு நிகழ்வு பேச சொல்லி இருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் பேசுகிறேன். ஒரு ஜோதிடம் அப்படின்னு ஆரம்பிக்கும் போது, ஆதிபத்தியம் முக்கியம். ஆதிபத்தியம் முதல்ல பேசுறேன். அதுக்கப்புறம் அடுத்த நிகழ்வு வர்றேன். ஏன் நாலாம் வீடு அம்மா? மத்ததெல்லாம் நாம் எதிர்பார்த்தது போல இல்ல. ஒன்பதாம் வீடு எப்படி இருக்கு அப்படிங்கிறதை விட நாலாம் வீடு தான் அதிகமா கேள்வி இருக்கும். அம்மா பத்தி கேள்வி இருக்கும். வீடு பத்தி கேள்வி இருக்கும். சொத்து பத்தி கேள்வி இருக்கும். சுகத்தைப் பற்றி கேள்வி இருக்கும். வாகனத்தை பத்தி கேள்வி இருக்கும். அப்படித்தான கேள்வி இருக்கும்.
நாலாம் பாவத்துக்கு ஒரு ஆதிபத்தியம் பாருங்களேன். மேஷ லக்னத்தில் ஒருவர் பிறக்கிறார். மேஷ லக்னத்திற்கு நாலாம் வீடு கடகம். ஆனா ஒன்பதாம் வீடு யாரா வருவார்? அப்பா எப்படி வருவார்? ஒன்பதுக்கும் 12க்கும் அப்பா யாரு, குரு. 12 யாரு? விரையத்துக்கு அதிபதி யாரா வருவார்? அப்பா தான் வருவார்.
சரி ரிஷபத்துக்கு, ரிஷப லக்னத்திற்கு சொல்லுவோம். நாலாம் வீடு சூரியன் பலமா இருக்கு. ஆனா ரிஷபத்துக்கு, ஒன்பதுக்கும் பத்துக்கும் தர்ம கர்மாதிபதி சனி பகவானே வருவார். இப்ப நீ என்ன சொல்லுவ மூர்த்தி. இதுக்கு ஒரு விதிவிலக்கு இருக்கு.
அடுத்தது மிதுனம். மிதுன லக்னத்திற்கு, நாலாம் அதிபதி கன்னி. அவரே தாயும், மகனுமா, புதனே வருவார். ஆனா எட்டுக்கும் ஒன்பதுக்கும் உரியவர், யார் வருவார் சனி பகவான் வருவார். அப்ப என்ன நடக்கும் அட்டமாதிபதி வேலையும் அப்பா தான் செய்வார். பக்கத்து வீட்டுக்காரர், எதிர்த்த வீட்டுக்காரர் செய்ய மாட்டார். அப்பா தான் செய்வார். அதே நாலாம் வீடு யாரு அம்மா மட்டும் தான், புதன் மட்டும் தான் செய்வார்.
அடுத்து கடக லக்கனம். கடக லக்னத்திற்கு, நாலாம் அதிபதி யாரு சுக்கிரன். அதே கடக லக்னத்திற்கு, ஆறாம் அதிபதி யாரு? 6க்கும் 9க்கும் அதிபதி குரு. அப்ப, கடன், வம்பு, வழக்கு, நோய், நொடி, கடக லக்னத்தில் ஒரு ஜாதகம் லக்னமாக போகும்போது, அட்சய லக்னமாகவோ, பிறப்பு லக்னமாகவோ போகும் போது, கணக்கெடுத்து பாருங்க அப்பா என்ன சேர்த்து வைத்து போயிருப்பார்? கடனைத் தான் சேர்த்து வச்சிட்டு போயிருப்பார். இந்த ஆதிபத்தியம், அட்சய லக்கன பத்ததி படித்த நண்பர்களுக்கு தெரியும். ஆதிபத்தியம் தான் முதல்ல முக்கியம். ஆதிபத்தியத்தை வைத்து பலன் சொல்லி விடலாம்.
கடக லக்னத்தில், ஒருத்தர் வருகிறார் அப்படின்னா, அப்பா சேர்த்து வைத்த கடனை பிள்ளை கொடுக்கணும். இது தான் விதி. அது என்ன கடனாகவும் இருக்கட்டும். இப்போ நாலாம் வீடு கடகத்துக்கு யாரு 4-க்கும் 11 க்கும் யோகமா உடையவர் யாரு? சுக்கிரன். அதே, சிம்ம லக்னத்திற்கு நாலாம் அதிபதி யாரு? விருச்சிகம். சிம்ம லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி, மேஷம் செவ்வாய். அதே மாதிரி சிம்மத்துக்கு மட்டும் இந்த ஆப்ஷன் இருக்கு. அடுத்து கன்னிக்கு நாலாம் அதிபதி யாரு? அம்மா, குருவா வருவாங்க. ஒன்பதாம் அதிபதி, கன்னிக்கு 9 ஆம் அதிபதி யார்? சுக்கிரன். இரண்டுக்கும், ஒன்பதுக்கும் உரியவர் யாரா வருவார் சுக்கிரன். ஆனா இந்த இரண்டு, ஆதிபத்தியத்தை மட்டும் பாத்தீங்கன்னா, நாலாம் வீடு மட்டும் யோகமா அமையக்கூடிய அமைப்பு வரும். மத்த எந்த பாவகத்துக்கும் வராது. ஐந்தாம் பாவத்துக்கு பாருங்கள். ஆறாம் பாவகத்துக்கு பாருங்க. ஒன்பதாம் பாவகத்துக்கு பாருங்கள்.
இப்ப, துலாம் லக்னம். துலாம் லக்னத்திற்கு, நாலாம் அதிபதி ஐந்தாம் அதிபதி சனியா வருவார். துலாம் லக்னத்திற்கு 9 ஆம் அதிபதியும், 12 ஆம் அதிபதியும் யார் வருவார்? புதன் வருவார்.
விருச்சிக லக்னத்திற்கு, 3 க்கும் 4 க்கும் உடையவர் சனி பகவான் வருவாரு. அதே விருச்சிக லக்கினத்திற்கு, ஒன்பதாம் அதிபதியாய் யார் வருவா? சந்திரன்.
அதே போல, விருச்சிக லக்னத்திற்கு, 9 ஆம் அதிபதி யாரா வருவார்? சந்திரன். அதே மாதிரி, விருச்சிக லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சந்திரன் லக்னத்தில் நீசமா போயிடுவார்.
இது நிறைய விஷயம் பேசணும். நான் சுருக்கமாக சொல்றேன்.
அடுத்து தனுசு லக்னம். தனுசு லக்னத்திற்கு, நாலாம் அதிபதி குரு பகவான். தனுசு லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி சூரியன்.
அதே மாதிரி மகர லக்னம். மகர லக்னத்திற்கு, நாலாம் அதிபதி யார் என்றால் செவ்வாய். மகர லக்கினத்திற்கு 6க்கும் 9க்கும் உரியவர் யாரப் போவார்னா, அப்பாவா வருவார். அப்போ, இரண்டு பாவங்களுடைய வேலையை பார்த்தாலும் கூட நாலாம் இடம் மட்டும் எல்லாவற்றுக்கும் விதி விலக்காக வரும்.
ஏன் நாலாம் பாவகம் மட்டும் நான் பேசுறேன்னா, நான் கும்பத்துக்கு வந்துடுறேன். கும்பத்துக்கு நாலாம் அதிபதி யார் என்றால் 4 க்கும் 9 க்கும் உடையவன் சுக்கிரன். அதே மாதிரி மீன லக்னத்திற்கு, 4 க்கு உடையவன், புதன் வருவார். அதே மாதிரி, ரெண்டுக்கும் ஒன்பதுக்கும் உரியவர் யார் அவர் செவ்வாய் வருவாங்க.
ஆனா இந்த நாலாம் பாவம் மட்டும் மிக முக்கியமான பாவகம். அதனால் தான், அம்மா முதன்மையாக நாலாம் பாவகம், ALP லக்னத்தில், நிகழ்காலத்தில், ஒரு ஜாதகர் அடைய வேண்டிய யோகங்களை கொடுக்க கூடிய அமைப்பு யாருக்கு, இருக்குன்னா 1-4-7-10.
ஒரு ALP லக்னத்திற்கு, இப்ப மேஷ லக்னத்தில் ஒருத்தர் ஜாதகம் போகிறது என்றால், மேஷ லக்னத்திற்கு நாலாம் வீடு கடகம். மேஷம், கடகம், துலாம், மகரம், இந்த நாலு லக்னத்தில் ஒரு நிகழ்வு நடந்தால், நிகழ் காலத்தில் அந்த ஜாதகர் நிகழ் கால கர்மாவை, வீடு, வண்டி, வாகனம், சொத்து, திருமணம், திருமணம் சார்ந்த விஷயங்கள், தொழில் சார்ந்த விஷயங்களுக்குத் தான், கேள்விக்குத் தான் வருவார். வேற எந்த கேள்விக்கும் வர மாட்டார். இதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று பார்த்தால், ஜென்ம லக்னம் தனுசு. தனுசு லக்னத்திற்கு நாலாம் வீடு யாருன்னு பார்த்தா மீனம். அவருக்கு 31 ல் இருந்து 40 வயது. 31 ல் இருந்து 40 வயதில் என்ன கேட்க வந்திருப்பார்? வீடு வாங்கலாமா, வண்டி வாங்கலாமா, வாகனம் வாங்கலாமா, சொத்து வாங்கலாமா? அம்மா எப்படி இருப்பாங்க? என்னுடைய நிகழ்வுகள், என்னுடைய வயதுக்கு ஏற்ப, என்னுடைய லக்னத்தை நான் மாற்றி அமைக்கும் போது, கண்டிப்பாக இந்த ஜாதகர் எதற்காக வருவாரு? வீடு வண்டி வாகனத்துக்காகத் தான் வருவார். www.alpastrology.com
இல்ல சார். 40 வயதில் ஒருவர் நோய்வாய்ப்படுவார். அது இருக்கா என்றால், மீன லக்னம் போகும்போது, ஆறாம் அதிபதி சூரியனாக வருவார். சூரியன் மீனத்தில் இருந்தால் அவர் நோய்வாய்ப்பட்டுத் தான் வருவார். அப்படி இல்லன்னா, அட்டமாதிபதி சுக்கிரன், மீனத்தில், லக்னத்தில் உச்சமாக இருக்கும் போது, கண்டிப்பாக ஆபரேஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வு இருக்கும்.
அதே மீன லக்னத்திற்கு, பத்தாம் அதிபதி யார் என்றால் குரு. ALP லக்கினத்திற்கு, பத்தாம் அதிபதி எப்பவுமே சுமை தூக்கக் கூடிய பகுதி. பத்தாம் அதிபதிங்கிறது, நீங்க என்ன தூக்க போறீங்க, எவ்வளவு வெயிட் தூக்க போறீங்க, அப்படிங்கிறது தான். அட்சய லக்னத்தில 10 ஆம் பாவகம், வாழ்க்கையில வந்து நான் 100 கிலோ தூக்குறேனா ஆயிரம் கிலோ வெயிட் தூக்குறேனா என்பது பத்தாம் இடந்தாங்க.
பத்தாம் இடம், நான் ஏன் அசுப பாவமா எடுத்தோம்னா, 6-8-10-12 இல் ஒரு கிரகம் இருக்கக் கூடாது. இதுதான் ALP யின் விதி. அட்சய லக்ன பத்ததியோட, விதி.
ஏன் பத்தாம் பாவத்துக்கு, இவ்வளவு முக்கியத்துவம் நான் கொடுத்தேன்னா, இந்த பத்தாம் பாவகம் என்பது என்னுடைய வேலை. பத்தாம் பாவகம் என்பது என்னுடைய தொழில். தொழில் நிறைய தூக்க, தூக்க, என்னுடைய கர்ம பதிவு தூக்கிக் கிட்டே போகும். ஏறிக் கிட்டே போகும். இது நமக்குத் தெரியாது. இது காலம் கடந்து, 40 வயது, 50 வயது, 70 வயது, 80 வயது போகும் போது தான், என்ன பதிவு நாம தூக்கிட்டு வந்திருக்கோம், அப்படிங்கிறது தெரியும்.
பத்தாம் வீடு பலப்பட்டது என்றால், கண்டிப்பாக இந்த ஜாதகர் மனக் கஷ்டத்தைப் படுவார். இப்போ மீன லக்கினத்திற்கு 10 ஆம் அதிபதி குருவாக வருவார். வேறு யாரும் தூக்க வேண்டியது இல்லை. நானே தூக்கிடுவேன். பக்கத்து வீட்டுக்காரர், எதிர்த்து வீட்டுக்காரர் எல்லாம் வேண்டியது இல்லை. நானே தூக்கிக்குவேன். எனக்கு தொழில் நல்லா ஓடுதுன்னு நினைக்கிறீங்கல்ல. இதுல என்ன தொழில் இருக்கு, எந்தத் தொழில் நம்முடைய கர்ம பதிவுகளை, என்ன பதிவுகளை அதில் எடுக்குது? இது முழுக்க முழுக்க யார் காரணம்? ஜாதகரே காரணம்.
அடுத்து, மேஷ லக்னம். தனுசு லக்னத்தில் பிறந்தவர், மேஷ லக்னம் செல்லும் போது வந்தார் என்றால், குழந்தைகள் பற்றிய கேள்வி தான் கேட்பார். என் குழந்தைக்கு படிப்பு எப்படி இருக்கு? என் குழந்தைக்கு வீடு வாங்கணும். என் குழந்தை வெளிநாடு போக வேண்டும். என் குழந்தைக்கு எப்படி முக்கியத்துவம். தன்னை பற்றி மறப்பார். முதல் நான்கு பாகம் வரைக்கும் தான், நான். நாலு பாவகம் முடிந்ததும் என் குழந்தைக்காக வீடு கட்டுவது. என் குழந்தைக்காக வெளியூர் போவது. என் குழந்தைக்காக சம்பாத்தியம் பண்ணுவது என் குழந்தைக்காக படிப்புக்கு என்ன பண்ணுவது.
அதே 51 லிருந்து 60 வயசு வரைக்கும், தனுசு லக்னத்தில் பிறந்தவருக்கு, ரிஷப லக்கனம் வரும்போது அவருக்கு கண்டிப்பாக முழுக்க முழுக்க கடன் சார்ந்த நிகழ்வுகள் தான் வரும். நீங்கள் எழுதி வச்சி பாருங்கள். 51 வயதில் இருந்து 60 வயது வரைக்கும் இருப்பாங்க. இந்த வயசுல ஒண்ணு நோய் பத்தி தான் கேள்வி கேட்பாங்க. இல்லேன்னா, கடன் பத்தி தான் கேள்வி கேட்பாங்க. வேற எந்த கேள்வியும் இருக்காது. கடன், நோய், வம்பு, வழக்கு.
இல்ல சார், 30 வயசிலேயே கடன் இருக்கு. 30 வயசுல லக்னம் தனுசு லக்னத்திற்கு, 3 ஆம் வீடு கும்பம். கும்பத்துக்கு ஆறாம் அதிபதி சந்திரன். கும்ப ராசியில் பிறந்திருப்பாங்க. தனுசு லக்னம், ஜென்ம லக்னமாக இருந்து, கும்ப ராசியில் ஒருத்தர் பிறந்திருந்தால், கண்டிப்பாக 21 வயசுல இருந்து 30 வயசு வரைக்கும் கடனாளியா தான் திரியணும். நீங்க எழுதிவைத்து பாருங்கள். ஒவ்வொரு ஜாதகத்தையும் எடுத்து போட்டு பாருங்கள்.
51 வயதில் இருந்து 60 வயது வரைக்கும் கடன் சார்ந்த நிகழ்வுகள் இருக்கும்ல. அந்த கடன் சார்ந்த நிகழ்வுகள் இல்ல சார். அப்படி என்றால் இந்த ஜாதகர் ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் அவர் 11ம் வீட்டில் மீனத்தில் இருந்தால் அவர் தப்பித்துகிறார். கொஞ்சமா, தப்பிச்சுகிறார்.
இல்ல சார். ரிஷபத்துக்கு அதிபதி சுக்கிரன் 2 ல் இருக்கிறார் சார் நல்லா இருக்காரு சார். கொஞ்சம் தப்பிச்சுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அவரே ஆறாம் வீடான துலாமிலோ, எட்டாம் வீடான தனுசிலோ, பத்தாம் வீடான கும்பத்திலோ, 12ஆம் இடம் மேஷத்திலோ இருந்தால், கண்டிப்பா கடன் சார்ந்த விஷயத்தில் இந்த ஜாதகர் மாட்டி இருப்பார்.
யாருக்கெல்லாம் ரிஷப லக்னம் இருக்கு? அவங்களுக்கு, ஆறாம் வீடான துலாம், எட்டாம் வீடான தனுசு, பத்தாம் வீடான கும்பம், 12 ஆம் வீடான மேஷம், இந்த இடத்தில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பா கடன் சார்ந்த விஷயங்கள் வரும். நீங்க வீட்டுக்குள்ள இருந்தாலும், சார் லோன் வாங்குறீங்களா? உங்களுக்கு லோன் ஆஃபர் இருக்கு, வாங்கிக்கிறீங்களா என்பார்கள். சரி, ஏதாவது லோன் தானே வாங்கிக் கட்டிக்கலாம், அப்படின்னு நினைச்சுட்டு, இன்னைக்கு போற மாதிரி தான், என்னைக்கும் போகும் அப்படின்னு நினைச்சு வாங்கிடுவாங்க. கண்டிப்பா கட்ட முடியாது.
இதே மாதிரி தான் அட்சய லக்னத்தில் முதல் விஷயம் வந்திருக்கிறவுங்களுடைய கேள்வி. 20 ல் இருந்து 30 வயதுக்குள்ள என்ன கேள்வி கேட்பாங்க? திருமணத்தை பற்றி தான் கேள்வி கேட்பாங்க. 10 ல் இருந்து 20 வயதில் வந்தால், என்ன கேள்வி கேட்பாங்க? படிப்பு பத்தின கேள்வி தான் கேட்பாங்க.
ஒரு வயசுல இருந்து பத்து வயசு வரைக்கும் என்ன கேள்வி கேப்பாங்க? ஜாதகருடைய உடல்நிலை பற்றி. அப்பா பத்தி அம்மா பத்தி. இந்த குழந்தை பிறந்திருக்கு என்ன செய்ய? ஜாதகருடைய உடல்நிலை பற்றி. அம்மாவோட உடல்நிலை எப்படி இருக்கிறது? அப்பாவோட உடல்நிலை எப்படி இருக்கிறது? இந்த குழந்தை பிறந்ததற்கு பிறகுதான் வயிறு வலிக்குது எத்தனை பேர் சொல்றாங்க. இந்த குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான் வீடு கட்டினேன். இந்த குழந்தை பிறந்ததும், முதல் பத்து வயது வரைக்கும் ஜாதகருக்கு அப்பாவோட ஜாதகம் அம்மாவோட ஜாதகம் குழந்தையோட ஜாதகம் மூன்று ஜாதகமும் அங்கு பேசும். நாம என்ன பண்ணனும்? பாரம்பரியத்தில் பாலாரிஷ்ட தோஷம் 12 வயது வரைக்கும், அந்த ஜாதகம் பேசாது.
ஆனா நான் என்ன பண்றேன்? 10 வயது வரைக்கும், அந்த குழந்தைக்கு, முழுமையாக அந்த ஜாதகத்திற்கு, உடல் சார்ந்த நோய்கள் மட்டும் தான் குறிக்கப்படும். 11 வயதில் இருந்து 20 வயது வரைக்கும், படிப்பு சார்ந்த கேள்விக்கு தான் வந்திருப்பார். வந்ததும் என்ன சொல்றோம், சார் நீங்க குழந்தைக்கு படிப்புக்காக வந்து இருக்கீங்களா? ஆமா சரி.
21 வயதிலிருந்து 30 வயதிற்குள் வந்திருந்தா என்ன சொல்லிருப்போம்? சார் திருமணத்துக்காக வந்து இருக்கீங்களா, சரி. 31 வயதில் இருந்து 40 வயது வரைக்கும், இப்ப என்ன வேலை, தொழில் சூப்பர். இன்னொரு கேள்வி இருக்குமே. நான் இடம் வாங்கலாமா? வீடு கட்டலாமா? எங்க பாக்க மனை அமையும்? 31 வயசில் 40 வயசில் தானே வீடு கட்டுவது பற்றி யோசிப்போம். 80 வயசுல யோசிக்க போறோமா, இல்ல. 20 வயசுல யோசிக்கப் போறோம். ஆக ஏதோ பெருசா ஜீபூம்பா அப்படின்னு நினைப்பாங்க. அப்படி எல்லாம் கிடையாதுங்க.
சரி, 41 வயசுல இருந்து 50 வயசு வரைக்கும், என்ன இயங்கும்? ஐந்தாம் பாவகம் இயங்கும். குழந்தைகளுக்காக ஒரு ஜாதகர் வந்திருப்பார். மறுபடி மறுபடி சொல்றேன். குழந்தைகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக வரும்.
51 லிருந்து 60 வயது வரைக்கும் நோய் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தான் அந்த ஆள் வந்திருப்பார். சரி 61 வயதில் இருந்து 70 வயது வரைக்கும், அப்பாடா இப்பதான் நான் இந்த பிள்ளைக்கான நிகழ்வுகளை சரியா பண்ணிட்டேன். அப்படின்னு ஒரு பெருமூச்சு விட்டுட்டு, அடுத்து என்ன பண்ணுவாரு ஏதாவது இன்னும் கொஞ்சம் பிள்ளைக்கு சேர்த்து வைக்கலாமா அப்படின்னு கம்யூனிகேஷன் ஆரம்பிச்சிடுவாரு. சும்மா தானே இருக்கோம். பண்ணி வைச்சிடுவோம்.
58 வயதில் ரிட்டயர் ஆயிட்டா, அப்ப என்ன பண்ணுவோம்? கொஞ்சம் சேர்த்து வைப்போமே, அப்படின்னு கொஞ்சம் ரிலாக்ஸ்டா பண்ணுவாங்க. அப்படி பண்றதில்ல. இப்போ என்ன பண்ணுவோம் அதுவும் பத்தாம் அதிபதி லக்னத்தில் உட்கார்ந்து இருந்தால், தனுசு லக்னம் பிறப்பு லக்னம். இப்ப போறது மிதுனம் ALP 10 ஆம் வீடு குருவா வருவாரா, அவர் சும்மா இருப்பாரா, வட்டிக்கு கொடுத்து வாங்குவார்.
அடுத்து என்னது எட்டாம் வீடு. அப்ப என்ன பண்றோம்? 71 வயதிலிருந்து 80 வயது வரைக்கும் எட்டாம் பாவம் இயங்கும். அப்ப என்ன கேள்விக்கு வந்திருப்பார்? ஆயுள் சம்பந்தப்பட்ட கேள்வி. அடுத்து என்னுடைய நோய் சம்பந்தப்பட்ட, தீராத நோய் சம்பந்தப்பட்டது, ஆபரேஷன் சம்பந்தப்பட்டது. அப்போ என்னன்னா, குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு ஆபரேஷன் நடக்கும். ஒருத்தர் வீட்ல 71 வயதில் இருந்து 80 வயது வரைக்கும் இருக்காங்களா? அந்த வயதுக்கு தகுந்தாப்ல தான் நடக்கும். 81 வயதிலிருந்து 90 வயது வரைக்கும் எப்படி இருக்கும்? அப்பாடா என்னோட வாழ்க்கையில, நான் செய்ய வேண்டிய விஷயத்தை செஞ்சுட்டேன் அப்படின்னு நிம்மதியா பெருமூச்சு விடுவாங்களா, இல்லையா?
ஒன்பதாம் வீடு என்ன பாக்கியம் அப்படின்னு சொல்றோம். யோகம், ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றது. என்ன 81 வயதிலிருந்து 90 வயதில் ஒருவரை பார்க்கிறோம் என்றால், அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கினா, ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றது போல. வேற எதுவும் வேண்டியதில்லை.
இப்ப எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீங்க யாரு வேணாலும், நல்லவரா இருக்கலாம், கெட்டவரா இருக்கலாம், அவர் எப்படினாலும் இருக்கலாம். யாரா வேணாலும் இருக்கலாம். 81 ஒரு வயதிலிருந்து 90 வயது வரைக்கும் ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணா என்ன காரகத்துவம் கிடைக்குமா, நமக்கு ஆசீர்வாதம் கிடைக்குமோ, அதே ஆசீர்வாதம். இவர் நல்லவர், கெட்டவர் அப்படி எல்லாம் வேண்டாம். ஆசீர்வாதம் வாங்குங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கை மாறும்.
நான் இந்த இடத்தில் நிற்பதற்கு, உண்மையிலேயே சந்தோஷப்படுவது, ஏதோ ஆண்டவன் எனக்கு கொடுத்தார். நான் வந்து இந்த நிகழ்வு இப்படி சொல்லலாமா என்று கூட தெரியவில்லை. நான் 16 வருஷம் பழனி போகும்போது ஒவ்வொரு வருடமும் பிள்ளையார்பட்டில போய், இரவு தங்கி விடுவேன். பழனிக்குப் போவேன். பழனிக்கு போகும் போது, ஆஞ்சநேயரை போய் பிடிக்க சொன்னது பழனி முருகன். அது எனக்கா தோணுகிற விஷயமா, அது எனக்கு எப்படி தோணுச்சு, தெரியல. அதுக்குப் பிறகு ஆஞ்சநேயரை போய் பார்த்தேன். அவ்வளவுதான், என்னோட வாழ்க்கை மாறியது.
அதுக்கு பிறகு தான், இந்த அறிவு எனக்கு இப்படி ஒரு நிகழ்வு கிடைத்தது. முதல்ல ஆறாம் வீடு தாண்டியாச்சு. எட்டாம் வீடு தாண்டியாச்சு. அடுத்து பத்தாம் வீடு, ரெண்டு கட்டத்தில் கழிச்சாச்சு. ரெண்டு கர்மா கழிச்சாச்சு. மூணாவது கர்மா, 91 வயசிலிருந்து 100 வயசு. இப்ப இருக்கிறதெல்லாம் அழிப்பான். பாத்தீங்கன்னா 91 வயதிலிருந்து 100 வயசு இருக்கும்போது, யார் எத்தனை பேர் வீட்டில் இருந்தாலும், எல்லாத்திலும் பாதிக்கு பாதி அழிச்சுப்புடுவாங்க.
91 வயதிலிருந்து இரண்டாவது கர்மா. அந்தக் காலத்துல தொழில் சொல்லக்கூடாது. கர்மா கழிப்பது. 91 வயதிலிருந்து 100 வயது வரைக்கும், 101 ல் இருந்து 110 வயது வரைக்கும், ஒரு ஜாதகர் 101 லிருந்து 110 வயது வரைக்கும் இருந்தால், அவருக்கு பேரின்பம், மகிழ்ச்சி, ஆனந்தம், பேரானந்தம். ஐந்தாம் இடம் ஆனந்தம் என்றால், பதினோராம் இடம் பேரானந்தம், யோகத்தை கொடுக்க கூடிய அமைப்பு உண்டு.
111 இல் இருந்து 120 வரைக்கும் வாழ்ந்தால், அதுதான் முக்தி மோட்சம் என்பது பாரம்பரியம். அதே தான் நானும் சொல்கிறேன். அட்சய லக்னத்தில் 111 இல் இருந்து 120 வயது வரைக்கும் வாழ்ந்தார் என்றால், அந்த ஜாதகர் முக்தி மோட்சத்திற்கான இந்த உடலை, கடத்திக் கொண்டு வந்துள்ளார்.
இந்த உடலை எந்த துன்பமும் படுத்தாமல், கடந்து வந்த பாதை நல்லதா இருக்கு, அப்படின்னா தான் கடக்க முடியும். இல்லை என்றால் கடக்க முடியாதுங்க. இதுக்கு இன்னும் இரண்டு கேள்வி இருக்கு. இரண்டு விஷயம் சொல்லணும். எப்படி என்றால் 34 வயதில், பெரிய மகான்கள் இறந்து இருக்கிறார்கள் 38 வயதில் மகான்கள் இறந்திருக்காங்க. இதுக்கு என்ன சொல்லுவ, அப்படின்னு கேள்வி கேட்கலாமா?
111 வயது வரலை, 112 வயது வரலை, 120 வயது வரலை. முக்தி மோட்சம் அடைந்த எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள் நமக்கு தெரியுமா?
நம்ம வயல்ல, இரண்டு விஷயம் முதன்மையா பாக்கணும். ஒரு வயல்ல தோப்புக்கு மரம் வெட்ட போறோம். முதல்ல என்ன மரத்தை வெட்டுவோம். நேரா இருக்கிற மரத்தை வெட்டுவோம். ஏன் வளைவா குருடா நெளிவா ஒன்னுமே வளராத மரத்தை வெட்டுவோம், தெரியுமா? களை எடுக்கும் போது, முதல்ல என்ன களை எடுப்போம், வேண்டாத புல்களை, பயிர்களை எடுப்போம்.
அதே மாதிரி, ஒரு இடத்துல அது மாதிரி எடுப்போம். இன்னொரு இடத்துல, நேர்மையான, உண்மையான, உயர்ந்த மரத்தை எடுப்போம்ல. இதுதான் வாழ்க்கை. இது இரண்டையும் நம்ம ஒப்பீடு செய்தால், நம்ம வாழ்க்கை தெரிந்துவிடும். வேற எதுவுமே தெரியாதுங்க. நம்ம வாழ்க்கையில, இது ரெண்டு விஷயத்தை தான், நாம பார்க்கணும்.
முதன்மையான விஷயம் என்னன்னா, நாம ஒரு மரம் வெட்டும் போது முதல்ல என்ன பண்ணுவோம்? நேரான மரத்தை வெட்டுவோம். அதே இன்னொரு இடத்துல போகும்போது அங்க இருக்கக்கூடிய வளைந்தது. இது வளராதுங்க. இதுக்கு மேல இது கட்டையிட்டு போச்சுன்னு சொல்லுவாங்க. ஊர்ல பழமொழி சொல்லுவாங்க. தெரிஞ்சிருக்கு உங்களுக்கு. என்ன பண்ணுவோம், அதைத்தான் வெட்டுவாங்க. நாலு மரம் இருக்கும், ரெண்டு மரத்தை வெட்டி போட்டு, ரெண்டு மரம் தான் வைப்பாங்க. இது ரெண்டும் வளைந்து இருக்கு இது வேண்டாம் அப்படின்னு சொல்லி வெட்டுவாங்களா? அதே வந்து கொஞ்சம் பெருத்த உடனே என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் வளர்ந்ததும் இது நல்ல மரம் இதுதான் ஃபஸ்ட் வெட்டணும் அப்படின்னு வெட்டுவாங்களா? இது கொஞ்ச நாள் வளரட்டும் அப்படின்னு விட்டு வைப்பாங்களா? இதுதான் வாழ்க்கை. இதுல தான் நீங்க கேட்ட 111 -ம் இருக்கு. 34 -ம் இருக்கு. அதுல எது அப்படிங்கறது, நீங்க தான் பாக்கணும். நீங்க தான் வளர்ந்துக்கணும்.
அடுத்த விஷயம், அட்சய லக்ன பத்ததில வந்து, இப்படி வந்து வந்தவங்களுக்கு கேள்வி சொல்லியாச்சு. 21 வயதில் இருந்து 30 வயது வரை வந்தவங்களுக்கு கல்யாணம் அப்படின்னு சொல்லியாச்சு. கல்யாணம் எப்போ அப்படின்னு, அடுத்த கேள்வி வந்துரும். இப்ப என்ன பண்ணுவோம் இந்த அட்சய லக்ன பத்ததில, 108 நட்சத்திர பாதங்கள் தான் முதன்மையானது. அதன் பிறகு தான், கிரகங்கள். இப்போ, ஒன்பது, ஒன்பது, நட்சத்திர பாதங்கள் இருக்கு.
எப்பவுமே வந்து அட்சய லக்ன பத்ததில, நன்றி சொல்லணும். ஏன்னா இந்த நிகழ்வுகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். வார்த்தைகளால் இல்லங்க, மனதார. அது என்னன்னா ஆத்மார்த்தமா நன்றி சொல்லணும். கை தட்டுவதெல்லாம் சும்மா யுவராஜுக்கு வெளியே தெரியணும் என்பதற்காக, கைதட்டுவது. மனசுக்குள்ள உண்மையிலே நல்லா இருக்கணும், நீங்க வேண்டுங்க. யாரோ எனக்கு உதவி செய்வாங்க. நான் இப்போதும் சொல்றேன். ஏன்னா, இந்த மாதிரி ஒரு நிகழ்வு ஏற்படுத்துறது அவ்வளவு சிரமங்க. ஏன்னா இங்க எத்தனை பேரு உழைப்பு இதுல இருக்குன்னு நமக்குத் தெரியாது. நாம யுவராஜ் னு சொல்றோம். இங்க அத்தனை பேரோட உழைப்பும் இங்க இருக்கு. உண்மையிலேயே வந்து ஜோதிடர்களை வந்து சேர்க்க முடியாது சாமி. 10 டாக்டரை சேர்த்து விடலாம். பத்து வக்கீலை சேர்த்து விடலாம். பத்து ஜோசியரை சேர்ப்பது, கொஞ்சம் கஷ்டம் தான். நன்றி. ஏன்னா பழனி பாரதி எல்லாம் இதுல நிறைய அடிபட்டு இருப்பாரு பார்த்திருப்பார். நன்றி.
அட்சய லக்ன பத்ததில அடுத்த விஷயம் வந்துரும். ஜென்ம லக்னம், தனுசு லக்னம். ஏதாவது ஒரு வயது மட்டும் சொல்லுங்களேன். 45 ஆ, சரி. 45 க்கு என்ன கேள்வி வரும் நாம சொன்னோம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்வி. அப்போ என் குழந்தைகள் எப்படி இருக்கும். என்ன பத்தின கேள்வி விட்டாச்சு. இப்போ என் குழந்தையை பத்தின கேள்வி. அப்ப குழந்தையை பத்தி கேள்வி. 45 வயதில் என்ன லக்னம் போடணும் மேஷ லக்னம் போடணும். கடைசியா பேசுனது ஜென்ம லக்னம் தனுசு தானே. அப்ப 45 வயதுக்கு என்ன லக்னம் போடணும்? மேஷ லக்னத்தை போட்டு, பலன் சொன்னா அப்படியே பலன் வரும்.
மேஷ லக்னாதிபதி யாரு? செவ்வாய். அங்கே இருக்காரா? லக்னத்தில் ராகு கேது இருக்கிறதா இருக்கா, இல்லையா? இருக்கு. இப்போ முதன்மையான கேள்வி என்ன, நம்மளுடைய 45 வயது மட்டும் தெரியும். இது என்ன பண்ணனும் 45 * 360 டிகிரிய என்ன பண்றேன், 120 வருஷத்தால என்ன பண்றேன், ஒரு வயதுக்கு மூன்று டிகிரி 45 * 3 பெருக்கி 135. அப்போ 135 டிகிரி நகர்ந்து போச்சு அவ்வளவுதான். இப்போ தனுசு லக்னம், ஜென்ம லக்னமா எடுத்தோம்னா 135 டிகிரி நகர்த்துங்க தனுசு லக்னம் 30. மகரத்துக்கு ஒரு 30. கும்பத்துக்கு ஒரு 30. மீனத்துக்கு ஒரு முப்பது 120, வந்துட்டா இன்னும் 15 டிகிரி என்ன வரும் மேஷம். மேஷத்துல 15 டிகிரி என்ன நட்சத்திரம். பரணி நட்சத்திரம் 1ம் பாதம். மேஷ லக்னம், பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தான் ஒரு ஜாதகரை இயக்கும். பரணி நட்சத்திரத்தைப் பற்றி தான் அவன் கேள்வி இருக்கும். சுக்கிரன் எங்க இருக்கு இன்னைக்கு? மிதுனத்தில் இருக்கு. எங்க இருக்கு? மேஷ லக்னத்திற்கு எத்தனாவது வீட்டில் இருக்கு? மூன்றாம் வீட்டில். என்னுடைய முயற்சி எப்படி இருக்கும்? மேஷ லக்னத்தில் இருந்த ஜாதகர் என்னுடைய முயற்சி எப்படி இருக்கும்? என்னுடைய முயற்சி பத்தின கேள்வி கேட்கிறேன். யார் 45 வயசு சொன்னது? நான் ஒரு முயற்சி பண்ணி இருக்கேன். அந்த முயற்சி நடக்குமா? நான் ஒரு இடம் விட்டு இடம் மாறுவதற்கு. சுக்கிரன் என்றால் இடம். இடம் விட்டு, இடம் மாறுவதற்கு நான் முயற்சி பண்ணி இருக்கேன். இந்த இடம் எப்படி நிலைக்குமா? இல்ல, இடத்தில எனக்கு எதுவும் செலவு இருக்கா? நான் ஒரு வீடு, வீடு கட்டி, இன்னொரு இடம் போகணும்னு நினைக்கிறேன். இடம் எப்படி அமையும்? அப்போ ஒரு வயதுக்கு எத்தனை டிகிரி நகர்த்தணும்? மூன்று டிகிரி. உங்க வயதுக்கு மூன்று டிகிரி. இது என்ன அப்படின்னா, பாரம்பரியம் நிறைய விஷயம் படிச்சிருந்தோம் அப்படின்னா, கண்டிப்பா அட்சய லக்ன பத்ததி ஈஸியா இருக்கும். ஒரு வயதுக்கு மூன்று டிகிரி பெருக்கியாச்சு. இன்னிக்கு இரண்டே இரண்டு பேர் தான் பார்க்க போறோம் ஒன்னு மேஷ லக்னாதிபதி செவ்வாய். நட்சத்திராதிபதி சுக்கிரன். செவ்வாய், சுக்கிரன் எங்க இருக்கு ஒண்ணு, மூணுல. அப்ப முயற்சி சம்பந்தப்பட்ட கேள்வி. என்னுடைய முயற்சி ஜெயிக்குமா? அப்படிங்கிற கேள்விக்கு தான் ஜாதகர் வந்துருப்பாரு. இப்ப ஜெயிக்குமா, ஜெயிக்காதா? ஜெயிக்கும். முடிஞ்சு போச்சு, அவ்வளவுதான்.
சார், வீட்டைப் பத்தி சொல்லுங்க சார். எனக்கு வீட்டைப் பத்தி, ஒரு விஷயம் சொல்லுங்க. நாலாம் அதிபதி யாரு? சந்திரன். சந்திரன் எங்க இருக்கு? சிம்மத்துல. நல்லா இருக்கா? நல்லா இருக்கு. சிம்மத்தில் உள்ள சந்திரன் எங்க இருக்கு, நாலுக்கு ரெண்டுல இருக்கா, நல்லா இருக்கா? நல்லா இருக்கு. அப்ப வீடு சம்பந்தப்பட்டது.
அப்ப 10 ஆம் வீடு யாரு? மேஷத்துக்கு 10 ஆம் வீடு சனி பகவான். சனி பகவான் எங்க இருக்காரு? அங்கே தான் இருக்காரு? அப்ப என்ன பண்ணணும்? அதுவும் நல்லா இருக்கு. குரு எங்க இருக்காரு? இன்னைக்கு, குரு பகவான் மீனத்தில் இருக்கார்.
மேஷ லக்னத்தை ஒரு ஜாதகமா எடுத்துக்கிட்டு, லக்னத்தில் செவ்வாய், ராகு இருக்கு. அலர்ஜி வருவதற்கு வாய்ப்பு இருக்கு. இந்த 45 நாள் வரக்கூடிய, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரைக்கும் அலர்ஜி வரும். 45 நாள்,
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology