அற்புத நிகழ்வுகள்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பமும்

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 வளர்ந்து வரும் தொழில்நுட்பமும்

முன்னுரை

வளர்ந்து வரும் தொழில்நுட்பமும்

“அட்சய லக்ன பத்ததியை” வரவேற்கிறது!

டாக்டருக்கு சொத்துக் கிடைத்தது

முற்காலத்தில் ஜோதிடக்கலையை வாழ்க்கையின் பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் இப்பொழுதோ முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் நாம் ஜோதிடத்தைப் பயன்படுத்துகிறோம். ஜோதிடத்தை அறிந்தவர் எந்த நேரத்தில் கதவைத் தட்டினால் வெற்றி கிடைக்கும் என்ற சூட்சுமம் அறிந்து கொள்ளக் கூடியவர். மாயை தன் கண்களை மறைத்துக் கொண்டாலும், இது நிகழ்ந்தேறும் என்று மனதை தயார் நிலையில் வைத்திருப்பவர். இக்காலத்தில் நவீனம் பல வகைகளில் வளர்ந்தாலும், அந்த நவீனங்களை துவங்குவதற்காக ஜோதிடத்தை கையாண்ட ‘சித்திரலேகா’வின் கதை இது.

சித்திரலேகா ஒரு மருத்துவர்; செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் கடவுளின் கண்ணாடி. ‘IVF’ (ஐ வி எஃப்) மூலமாக கருத்தரித்தலை பிரதானமான தொழிலாக செய்கின்ற இவர், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கற்பதற்காக பெரிதும் ஆர்வம் காட்டி முன் வந்தவர். உங்கள் துறைக்கு இது எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவக்கும் இந்த அட்சய லக்ன பத்ததி வெற்றிப்பாதைக்கான வழியைத் தரும் என்று, நான் பெரிதும் எதிர்பார்த்து வந்திருக்கிறேன் என்றார்.

அவர் கற்ற இந்த அட்சய லக்ன பத்ததி அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் சிறந்ததொரு அனுபவத்தை கொடுக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பத்தில் இவரைப் போல சிறந்து விளங்கக்கூடிய முன்னோடிகள், அட்சய லக்ன பத்ததி என்கிற ஜோதிட முறையை கையாள்வது சிறந்த எதிர்காலத்தைக் குறிக்கிறது.

ஒரு நாள் சஷ்டி டிவி யூ டியூப் சேனலில், வாக்குயோகி ஐயா அவர்களது நேர்காணல் நிகழ, திருமதி சித்திரலேகா அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னுடைய கணவரின் ஜாதகத்தை பகிர்ந்து கொண்டுக் கேள்விகளைத் தொடுக்கிறார். அவருடைய கேள்வி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீக சொத்தில் வீடு கட்டுவது சம்பந்தப்பட்டதாகும்!

வாக்குயோகி ஐயா அவர்கள் கட்டங்களை நுனி வழியில் மனதில் பதிவிட்டு, “உங்க சொத்த… உங்க மாமியார் பெயரில் இல்லையே? சொத்து கை மாறிடுச்சே! அவங்க பையன் மேல எழுதி வச்சுட்டாங்களான்னு கேட்டு சொல்லுங்க…?” என்று கேட்க சித்திரலேகா அவர்கள் “இல்லைங்கையா…! அந்த சொத்து… கூட்டு சொத்தாதான் இன்னும் இருக்கு..” என்று பதில் அளித்து நகர்ந்து விடுகிறார்.

15 நாட்கள் கழித்து எனக்கு கைப்பேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு “நான் ஐயாவிடம் பேச வேண்டும்” என்று பதட்டக் குரலோடு கேட்க, நான் விசாரிக்க ஆரம்பித்தேன்.

சஷ்டி டிவி நேர்காணலில் வாக்குயோகி ஐயா அவர்கள் சொன்னது போல, சித்திரலேகா அவரது மாமியார் தன்னுடைய இரண்டாவது மகனான கணவரின் தம்பியின் பெயரில், அந்த பல கோடி ரூபாய் சொத்து சில நாட்களுக்கு முன்னரே எழுதி வைத்திருக்கிறார். இந்த சொத்தின் மீது சித்திரலேகா அவர்களுக்கு மோகம் அல்ல; இந்த தம்பதியின் உழைப்பும் செலவுகளும் இந்த சொத்துக்காக பல கோடிகளை செலவழித்தது தன் கைக்குக் கிட்டுமா என்ற ஆதங்கம்.

இதை புரிந்து கொண்ட வாக்குயோகி அவர்கள் “ஜோதிட கட்டங்களின்படி, இந்த நிகழ்வு இப்படித்தான் நிகழ்ந்தேற வேண்டும் என்பது விதி….” என்று சொல்லி, ஆயினும் ஒரு வாரம் கழித்து சித்திரலேகா அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு எடுத்துரைக்கச் சொன்னார்.

அந்த வாரம் முடிவதற்கு முன்னரே வாக்குயோகி ஐயா அவர்கள் என்னைக் கூப்பிட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் அந்த சொத்தை பற்றிய நல்ல செய்தி சித்திரலேகாவிற்கு கிடைக்கும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள் என்று என்னிடம் கூற சித்திரலேகா அவர்களுக்கு தெரிவித்தேன்.

சரியாக 25 நாட்களில் சித்திரலேகா அவர்கள், என்னை கூப்பிட்டு மனம் நெகிழ்ந்தார். ஆம், சித்திரலேகா அவர்களது கொழுந்தனாருக்கு எழுதி வைக்கப்பட்ட அந்த சொத்து, மாற்றங்களை கிரகித்து, சித்திரலேகா அவர்களது கணவரின் பெயரில் மாமியார் அவர்களே மனம் உவந்து உரித்தாக்கி விடுகிறார்!

மருத்துவர் என்ற பட்டம்; சிறந்த தொழில்நுட்பத்தை கொண்ட மருத்துவர் என்ற புகழ்; பெண் ரூபத்தில் பிரம்மனின் தீட்சை; செல்வம் படைத்தவர்; கணவரும் ஒரு புகழ்பெற்ற மருத்துவர்; ஆயினும் சொத்தை பற்றிய கவலை; அந்த கவலையை தீர்த்து வைத்தது திருமதி சித்திரலேகா அவர்கள் நம்பிக்கை வைத்த ‘அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கிய திரு.சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்’.

இந்த ஊன்றுகோலின் வழியே; வாக்குயோகி அவர்களின் வரம் கிட்டியது அவருக்கு!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்