அற்புத நிகழ்வுகள்! part 1

ஸ்தூலமல்லாத சூட்சும நிறை பொருளே!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 ஸ்தூலமல்லாத சூட்சும நிறை பொருளே!

முன்னுரை

நான் வியந்து பார்த்த சில அற்புத நிகழ்வுகளை உங்கள் முன் சமர்பிக்கின்றேன். பல ஆச்சரியங்களும், அதிசயங்களுமாக என் கண்களுக்கு தெரிந்தவை இவை.

ஒன்று, இரண்டு அல்ல பல ஆயிரக்கணக்கான அற்புத நிகழ்வுகளை நடத்தியவரைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் படிக்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும்.

என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு மாற்றம் தந்த ஒரு நபரின் மூலமாக நடந்த அதிசயங்களைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

உதாரணமாக, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையைதான் முதல் அற்புதமான அதிசயமாக நான் பார்த்தேன். தொன்றுதொட்டு பாரம்பரியமான ஜோதிடக் கலையில், ஒரு புதிய பரிணாம வளர்ச்சியாக, லக்னம் நகரும் என்ற அற்புத நிகழ்வை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, உணர வைத்து, ஒரு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்றால் அதற்கு காலம் துணை நின்றால் மட்டும்தான் அதை செய்ய முடியும். காலம் என்பதுதான் இறைவன்.

பாரம்பரியமான பல யுகங்களாக கடந்து வந்த ஜோதிடத்தை, இன்றைய நவீன காலத்திற்கேற்றாற்போல் ஒரு எளிமையும், புதுமையையும், ஒரு துல்லியத்தையும் புகுத்தி ஒரு ஜோதிட முறை வருகிறது என்றால், இறைவனுடைய அனுக்கிரகம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதை புரிந்து கொண்டேன்.

நான் பார்த்த முதல் அதிசயமும் அற்புதமும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடமே. என்னுடைய ஜோதிட தேடலுக்கு விடையாகக் கிடைத்தது. ஜோதிடம் சார்ந்த பல நூறு கேள்விகளை என்னுடைய மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் ஒரு பதிலைக் கொடுத்தது. இந்த பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாமே தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது. அதேபோல் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பல ஜோதிட தேடல்களுக்கு வரமாக உங்கள் கையில் வந்து நிற்பது, அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்பதை உணர வைக்கும் முயற்சியே இந்த நூல்.

ஜோதிடர் சொல்வது நடைபெற வில்லை, இந்த ஜோதிடர் இப்படி சொல்கிறார், வேறு ஜோதிடர் மாற்றி சொல்கிறார், எதை நம்புவது? என்ற நிறைய கேள்வி எல்லார் மனதிலேயும் இருந்திருக்கும். அந்த கேள்விக்கெல்லாம் விடையாக, அற்புத நிகழ்வாக, அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என் கண்களுக்கு புலப்பட்டது. இதில் நான் பார்த்த முதல் சான்று லக்னம் நகரும், லக்னம் வளரும், லக்னம் மாறும் என்கிற திட்டவட்டமான கோட்பாடை வகுத்து, அழகாக மக்களுக்கு புரிய வைத்து பயன்படும் வகையில் உருவாக்கிய ஒரு நபரை பற்றிதான் இந்நூலில் பார்க்கப் போகிறோம்.

பல ஆயிரம் அதிசயங்களும் அற்புதங்களும் அவருக்குள் புதைந்து கிடக்கின்றது. அந்த அற்புதங்களில் சில துளிகளை நாம் இங்கு படிக்க போகிறோம் வாருங்கள்! உணர்வோம்!! உணர்த்துவோம்!!!

ஸ்தூலமல்லாத சூட்சும நிறை பொருளே!

இருளை நீக்குவதற்கு எட்டிப் பார்த்த சூரியன்; அந்த விடியற் காலையில் திருக்கருக்காவூருக்கு பயணம். திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், திரு ரூபேஷ் உட்பட நான்கு பேர் அந்த ஊரில் உள்ள கர்ப்பரக்ஷாம்பிகை கோயிலை நோக்கிய இலக்கு.

கோவில் கர்ப்பகிரஹம் சுற்றி செல்லும் வழியில் இவர்கள் கண்களுக்கு காஞ்சி மகா பெரியவா அவர்களின் பெரிய புகைப்படம் தென்படுகிறது. அந்த நான்கு பேர் மத்தியில் திரு சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் ஆதங்கத்துடன் முணுமுணுக்கிறார் "என்னையா.... நீங்க நிக்கிறீங்க..... பாக்குறீங்க...... ஆசீர்வாதம் பண்றீங்க.... ஆனா பேச மாட்டேங்கிறீங்க.....?" என்றதும் திரு ரூபேஷ் அவர்கள் வாக்கு யோகி அவர்களை நோக்கி தன் மனதிற்குள் "என்ன இவரு..... மகா பெரியவா போட்டோ கிட்டயே இவ்ளோ குளோசா பேசுறாரு....!" என்று நினைத்துக் கொண்டு கோவிலை நோக்கிய பயணம் தொடர்கிறது.

அன்று தரிசனம் முடித்து பட்டுக்கோட்டைக்கு தன் நண்பர்களுடன் திரும்பிய திரு சி பொதுவுடைமூர்த்தி அவர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு பிரயாணம் மேற்கொள்கிறார். சென்னையின் ஒரு திக்கு நுழைவாயிலான தாம்பரம் என்ற இடத்தை தொடும் நேரம் கைபேசியின் அழைப்பு வந்தது. கைபேசியில் மறுபக்கம் திருமதி சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள். "ஐயா.... நம்முடைய சிவகங்கை சாமியார், ஒருவர் மூலமாக காஞ்சி மடத்திலிருந்து உங்களுக்காக பிரத்யேகமாக ருத்ராட்ச மணியை பிரசாதமாக இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்...." என்று கூறியவுடன் திரு சி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு வார்த்தைகள் இல்லை!! ஆச்சர்யத்துடன் திளைத்துப் போனார்.

சிந்தனை களத்தில் மகா பெரியவா அவர்களின் அரவணைப்பும் அன்பும் நிறைந்து போனது.

முடிவுரை

நீங்கள் இந்நூலை முழுமையாக வாசித்திருந்தீர்கள் என்றால், நாம் வாழும் சம காலத்தில் இப்படி ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற பெருமிதம் நமக்கு இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்து வியந்த, ஒரு சில அற்புத நிகழ்வுகளை மட்டும்தான் இங்கு குறிப்பிட்டு இருக்கேன். இது இல்லாமல் இன்னும் பல அதிசயங்களும், அற்புதங்களும் ஆயிரமாயிரம் இருக்கிறது.

ஒரு திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் அம்மா கேட்ட ஒரு வார்த்தை, ஒரு பெரிய தாக்கத்தை அவருள் ஏற்படுத்தியது. அதன் மூலம்தான் அட்சய லக்ன பத்ததி எனும் அற்புதமான அதிசய ஜோதிடம் உருவானது. அதனால் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடமே, உங்கள் கண்முன் இருக்கும் அதிசயத்தின் அற்புதங்களுக்கு சான்றாக அமைகின்றது.

இந்த அதிசயத்தை நிகழ்த்திய ஒருவர் நாம் வாழும் சம காலத்தில் இருக்கிறார், அவரை நாம் பார்க்கிறோம், அவருடன் சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை இன்று நினைத்தாலும், அதை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். 

நீங்களும் ஒருமுறை அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை படித்தீர்கள் என்றால், அந்த பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும்; உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் நிகழும்.

இன்னும் அதிசயங்களும் அற்புதங்களும் தொடரும் ....

 

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்